தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், வேலூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணிக்கு பருவகால பட்டியல் எழுத்தர் நிலையில் தற்காலிகமாக பணி புரிய வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களிடமிருந்து மட்டும் 1.7.2021 அன்று 18 பூர்த்தியடைந்தவர்களுக்கு (ஆண்கள் மட்டும்) கீழ் குறிப்பிட்டுள்ள தேதிகளில் நேர்காணல் தேர்வு வேலூர் மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பதவவி முற்றிலும் தற்காலிகமானது மேலும் இது முற்றிலும் களப்பணியாகும்.
பருவகால பட்டியல் எழுத்தர் பணி
கல்வித்தகுதி : B.Sc ( Botany, Zoology, Chemistry, Physics, Mathematics and Bio Chemistry )
ஊதியம் : ரூ.2410 + அகவிலைப்படி
வயது வரம்பு : 01.07.2021 அன்று உள்ளபடி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது : OC -32
BC / BCM / MBC / DNC : 34
SC / ST / SCA : 37
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :
இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்காணும் அசல் ஆவணங்களுடன் நேரில் வரவும், கல்வி சான்று, ஜாதி சான்று, இருப்பிடச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் புகைப்படம்
மண்டல மேலாளர் அலுவலகம் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,சிவில்சப்ளைஸ் குடோன் ரோடு , பலவன்சாத்துக்குப்பம் , வேலூர் – 632 001.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :
பருவகால காவலர் பணி : 08.02.2022
நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை
TNCSC Vellore Recruitment 2022 Click here