TNHRCE Office Assistant Posts

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரன் பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம், வேலைவாய்ப்பு அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன் பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் கீழே குறிப்பிடப்பட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய இந்து மதத்தினை சேர்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து நிபந்தனைகள் உட்பட்டு 11/8/2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் 2023 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 45 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயல் அலுவலர், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் குலசேகரன் பட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு 11/8/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைத்துவிடும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

NOTIFICATION CLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *