கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், தூய்மை பாரத இயக்கம் தூய்மை பாரத இயக்கம்(ஊ) திட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (சுகாதாரம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் செயல்படுத்தும் பணிகளுக்காக வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு தகுதியான நபர் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
காலியிடம் : ஒன்று
தகுதிகள்: அதிகாரப்பூர்வமான பல்கலைக்கழகம் மூலம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கணினி நன்றாக இயக்குவதற்கு தெரிந்திருக்க வேண்டும்.
சுகாதாரம் சேவையை செயல்படுத்துவதில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
சமூக நடவடிக்கையில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை பின்வரும் முகவரியில் சேர்க்க வேண்டியது மேலும் விண்ணப்பம் பெறப்படும் இறுதி நாள் 7.8.2023
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : பின்னர் அறிவிக்கப்படும்
முகவரி: வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியம் ஓசூர்