தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
திருப்பத்தூர் மாவட்டம்
இரவு காவலர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பு இரவு காவலர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : இரவு காவலர்
ஊதியம் ரூ.15700-58100
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
GT : 32
BC/MBC/DNC : 34
SC/ST/SCA : 37
மொத்த காலி பணியிடங்கள் : 2
கல்வித்தகுதி : தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.10.2023
சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூபாய் 30 ஒட்டப்பட்ட அஞ்சல் உறை ஒன்று இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம் இ -பிளாக், மாவட்ட ஆட்சியரகம் திருப்பத்தூர்-635 601 என்ற முகவரிக்கு 31.10.2023 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்
தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
இரவு காவலர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
NOTIFICATION CLICK HERE