TNRD Recruitment 2023

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்
அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

விருதுநகர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் ஏற்பட்டுள்ள அலுவலக உதவியாளர் -03 காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்

ஊதியம் ரூ.15700-50000

வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது

GT : 32

BC/MBC/DNC : 34

SC/ST/SCA : 37

மொத்த காலி பணியிடங்கள் : 03

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.10.2023

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூபாய் 25 ஒட்டப்பட்ட அஞ்சல் உறை ஒன்று இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக அல்லது நேரடியாகவோ 11.10.2023 முதல் 31.10.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம், இராஜபாளையம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்.

அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விருதுநகர் மாவட்டத்திற்கான https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அல்லது https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/10/2023100682.pdf என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Notification click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *