தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 3.1.2024 முதல் 11.1.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் -01
சம்பளம் ரூ.15700-50000
பதவியின் பெயர்: இரவு காவலர்-01
சம்பளம் ரூ.15700-50000
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டும் (1.7.2023 அன்று உள்ளவாறு)
கல்வித்தகுதி : அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.
இரவு காவலர் பணியிடத்திற்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 11.1.2024 பிற்பகல் 5 45 மணி வரை
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டும் மைய (National Career Service Portal) www.ncs.gov.in இணையதளத்திலும் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 03.01.2024 -11.01.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம், பாலக்கோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் பின்னர் அனுப்பி வைக்கப்படும்
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Notification for Office Assistant and Night Watchman- Palacode Block Development Office | Notification for Office Assistant and Night WatchmanApplication for Office Assistant and Night Watchman | 03/01/2024 | 11/01/2024 | View Application |