தமிழ்நாடு அரசு குற்ற வழக்கு தொடர்வுத்துறை, அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை 2024
சென்னை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 5.1.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
ஊதியம் ரூபாய் 15700-58100
குறைந்தபட்ச வயது 1.7.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வுத்துறை, நம்பர் 5, காமராஜர் சாலை,சென்னை -5
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 5.1.2024 மாலை 5:45 மணி வரை
பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ நியமன அறிக்கையை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யவோ குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
மேலும் தேவைப்படின் தேர்வர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது
விண்ணப்பதாரர் சென்னை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
நேர்காணலின் போது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் இதர அசல் சான்றிதழ் வரப் பெற வேண்டும்.
மதிப்பெண் சான்றிதழ், வயது, இனம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களின் சுய சான்றோப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாளான 5.1.2024 மாலை 5:45 மணிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி/அகவிலைப்படி அளிக்கப்பட மாட்டாது.
பூர்த்திசெய்யப்ட்ட விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.