தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் காலியாக உள்ள இளநிலை மின் பொறியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இளநிலை மின் பொறியாளர் -01
சம்பளம் ரூ.35900 – 113500
மின் பொறியியலில் பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்.இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்று மற்றும் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும் 14.2.2024 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்பப்படும் மேல் உறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை.
விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
அசல் சான்றிதழ்கள் அனுப்பக் கூடாது.
விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.
காவல்துறை நன்னடத்தை சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம்-628 215