தேசிய தொழிற் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற் பழகுநர்கள் சேர்க்கை செய்திட மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தொழிற் பழகுநர் பயிற்சி அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 8.1.2024 திங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இம்மாமில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டு சர்க்கரை ஆலை போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள் சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு 500க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
ஐடிஐ முடித்தவர்கள் தொழிற் பழகுநர் பயிற்சி சேர்ந்து தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறலாம் மேலும் ஐடிஐ சேர்ந்து பயிற்சி பெற முடியாத பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் கல்வி தகுதி உடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டீஸ் சேர்ந்து மூன்று முதல் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறலாம், பயிற்சிக்கு மாதாந்திர உதவி தொகை 8,500 முதல் ரூபாய் 10000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும்.
எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Pradhan Mantri National Apprenticeship Mela 2024
The District Collector informed that District Level Pradhan Mantri National Apprenticeship Training Enrollment Camp will be held at Industrial Training Institute, Ulundurpet on 08.01.2024. For more details (PDF 26.0KB )