தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் அவினாசி சாலை, கோவை -18
வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
இத்திருக்கோயிலில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 17.2.2024 ஆம் தேதி மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.
கணினி இயக்குநர்- ஒன்று
சம்பளம் ரூ.15300-48700/-
அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயம்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அறிந்திருத்தல் வேண்டும்.
இரவு காவலர்- இரண்டு
சம்பளம் ரூ.11600-36800/-
தமிழில் படிக்கவும் எழுதவும் அறிந்திருக்க வேண்டும்.
1.7. 2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
கோவை மாவட்டம், அவினாசி சாலை, அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் – வேலைவாய்ப்பு அறிவிப்பு