தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,திருமயம் ஊராட்சி ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை , திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவறை எழுத்தர்,இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர் -01
சம்பளம் ரூ.15900-58500
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர் அலுவலக உதவியாளர்-02
சம்பளம் ரூ.15700-58100
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதர தகுதிகள்: சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
இரவு காவலர் -01
தமிழில் எழுத படிக்கச் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் ரூ.15700-58100
விண்ணப்பகாலம் 31.1.2024 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி
விண்ணப்பிக்க கடைசி நாள் 31.1.2024 மாலை 5:45
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர், ஊராட்சி ஒன்றியம், திருமயம், புதுக்கோட்டை மாவட்டம்-622 507
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் https://pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அனைத்து காலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்று,மாற்று சான்றிதழ், ஜாதி சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இட்ட நகல்களை இணைத்து மேலே குறிப்பிட்ட விண்ணப்ப காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை – ஒன்று இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
Rural Development and Panchayat Raj Department – Recruitment for Thirumayam Block | Recruitment for Thirumayam Block – Applications Office Assistant Click Here Record clerk Click Here Night Watchmen Click Here | 08/01/2024 | 31/01/2024 | View (329 KB) TYM_RC_Advt (331 KB) TYM_NW_Advt (330 KB) |