Tamil Nadu Post Office Recruitment 2024 | 10th Pass

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர் பணி ஜூன் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு..!

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிக முகவராக செயல்பட விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்பட 18 வயதிற்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்றோர் ,சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

நேரடி முகவராக தேர்ந்தெடுக்கப்படுவோர் செய்யும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும் குறிப்பாக கல்லூரி மாணவர்கள் படித்துக் கொண்டே நேரடி முகவராக செயல்பட்டு ஊக்கத்தொகை பெற முடியும்.

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் பெற்றுக் கொண்டு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், திருநெல்வேலி கோட்டம், திருநெல்வேலி-627 2002 என்ற முகவரிக்கு ஜூன் 6-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பித்தவர்கள் ஜூன் 7-ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம் (இரண்டாவது மாடி) பாளையங்கோட்டையில் நடைபெற உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *